வெள்ளி, 5 அக்டோபர், 2012

வாழ்த்துக் கவி


ஹுஸைன் இப்னு லாபிர்

ஐயா வணக்கம்
தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன்.
பாரதத்தில் உதித்ததனால்
பா ரதம்போல் கவி பொழியும்
பெயர் தனிலே ஜெயம் தாங்கிய
ஜெய பாரத பெருந்தகையே

அகிலத்துக்கும் அண்டத்துக்கும்
அணுவுக்கும் கருவுக்கும்
கிரகங்கள் விண்ணுளவி
கவி தொடுத்து விழங்க வைத்தாய்

சாளரத்து வழி தனிலே
திண்ணையிலே விழி வைத்து
ஈழத்து மாணவன் நான்
பெருந்தகையை அறிந்து கொண்டேன்

அடுக்கௌக்காய் உரை பொழிந்து
படம் வரைந்து விளக்கி வைத்த
ஆசானை வாழ்த்தவென
பேனாவை நானெடுத்தேன்

பெரியோரைப் பாரரிவார்
சிறியோனை யாரரிவார்
இருந்தாலும் உணர்வோடு
கடன் தீர்க்க விளைகின்றேன்

அணுவோடு உறவாடும்
பெருமனது உமக்கைய்யா
வாழ்த்துரைக்க வழிதேடும்
மனதோடு நானிங்கு
தினம் வாழ்த்தி உரைத்திடனும்
மனம் போற்றி புகழ்ந்திடனும்
பார் பார்த்து மகிழ்ந்திடனும்
உன் சேவை தொடர்ந்திடனும்

பெரு மனதில் சிறு இடத்தை
வாழ்த்துரையை வைப்பதற்கு
ஆசானை வேண்டி நின்றேன்
ஆதவனாய்ப் பார்க்கின்றேன்.

ஹுஸைன் இப்னு லாபிர்
மள்வானை
ஸ்ரீ லங்கா
Print Friendly
Share

11 Comments for “ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி”

  • பவள சங்கரி says:
    அன்பின் ஹுசைன் இப்னு லாபிர்,
    வணக்கம். தங்களுடைய தேனினும் இனிய கவிமொழியை, மதிப்புரையை, அப்படியே நானும் வழி மொழிகிறேன். தகுதியான ஒருவருக்கு, தரமான வாழ்த்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    பவள சங்கரி
  • ஜெயஸ்ரீ ஷங்கர் says:
    அன்பின் ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கு,
    ஸ்ரீ லங்காவிலிருந்து ஒரு வாழ்த்துக் கவி…
    கனடா வாழ் விஞ்ஞான கவிஞருக்கு..
    எங்கள் மதிப்பு மிக்க திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு..
    படிக்கும் பொது அகமகிழ்ந்தேன்.,
    திண்ணையில், வல்லமையில், அவரது பல கட்டுரைகள்
    நாடகங்கள், கவிதைகள், வாரா வாரம் படைப்புகளாக
    வெளியிட்டு அவரின் தரத்தை உயர்த்திக் கொண்டே
    இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக எழுதப் பட்ட
    தங்களின் வாழ்த்துப் பாடல் அருமை…!
    தாங்கள் பாராட்டிய திருவாளர். ஜெயபாரதன் அவர்களுக்கு எமது பாராட்டையும்..
    வாழ்த்தையும் தெரிவித்து…..இந்த உன்னத படைப்பைத் தந்து சிறப்பித்த உங்களுக்கும்
    எனது உளமார்ந்த நன்றிகளை..இங்கு பவளசங்கரியோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்ள மகிழ்கிறேன்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
  • S. Jayabarathan says:
    வாழிய வென்று பைந்தமிழ்ப் பாக்களில் பாராட்டி
    ஈழத் தமிழ்த் தோழர் திண்ணையில் என்னைச் சீராட்ட
    தோழியர் இருவர் தமிழகத்தில் இனிதாய் வழிமொழிய
    ஊழியன் பூரித்தேன் கனடாவில் கனிவாக நன்றியுடன்.
    ++++++++++++++++++++
    தமிழ்ப்பா எழுதிப் பாராட்டிய ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கும், வழிமொழிந்த பவள சங்கரி அவர்களுக்கும், அகமகிழ்ந்த ஜெயஶ்ரீ ஷங்கர் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.
    சி. ஜெயபாரதன்.
  • கௌதமன் says:
    ஜெயபாரதனின் பாரதி பற்றியக் கட்டுரைக்குப் பதிலாக காவ்யா அவர்கள் சென்ற வாரத்தில் கொடுத்த தகுதியற்ற வசை மொழியால் புண் பட்டிருந்த என் மனத்திற்கு மருந்து போல் அமைந்தது இந்தக் கவிதை. என் உளமார்ந்த நன்றிகள் ஈழத்து நண்பரே. எனக்குக் கவிதை எழுத வராது. ஆயின் உங்கள் கவிதையைப் படித்த பின் பவள சங்கரியின் அதே வார்த்தைகளில் முன் மொழிகிறேன். மீண்டும் நன்றிகள்.
  • சி. ஜெயபாரதன் says:
    வழிமொழியும் நண்பர் கெளதமன் அவர்களுக்கு நன்றி.
    காய்த்துக் கனிகள் தொங்கும் மரத்தில்தான் கல்லடிகள் விழும். ஆனால் வெறும் கல்லடிகளும், சொல்லடிகளும் மரத்தைச் சாய்க்க முடியுமா ?
    என்னை யாரும் இகழ முடியாது. அந்த அவல நிலையைத் தாண்டியவர்தான் திண்ணையில் எழுதத் துணிய வேண்டும்.
    சி. ஜெயபாரதன்.
  • Kavya says:
    சில எழுத்துப்பிழைகளைத்தவிர கவிதை நன்று.
    பெரியோரைப் பாரரிவார்
    சிறியோனை யாரரிவார்
    பாரறிவார், யாரறிவார் என்றுதானே இருக்க வேண்டும்? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
    ஜெயபாரதன் தமிழ்ப்பதிவுலகில் ஒரு நல்ல படைப்பாளி மட்டுமல்லாமல், கொடையாளியும் கூட. எப்படிப்பட்ட கொடையவை என்பதை கவிதை சொல்கிறது. அதற்கு மாற்றுக் கருத்தில்லை.
    முடிந்தவர்கள் செய்வார்கள்; முடியாதவர்கள் செய்பவர்களைத் தூடணை செய்வார்கள்.
    • Bala says:
      ‘பார்’ என்றால் உலகம் அஃறிணை ஒருமை. ‘பாரறியும்’ (பெரியோர்களை உலகம் அறியும்) என்றுதான் வரவேண்டும்.
    • Kavya says:
      இரண்டாவது, பெரியோரை, சிறியோனை என்பதில் மோனையில்லை. பெரியோரை, சிறியோரை என்று இருத்தல் நலம்.
      சங்கப்பாடல் இதோ:
      யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
      தீதும் நன்றும், பிறர் தர வாரா;
      நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
      சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
      இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
      இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
      வானம் தண் துளி தலைஇ ஆனாது,
      கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
      நீர்வழிப் படூஉம் புனை போல் ஆருயிர்
      முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
      பெரியோரை வியத்தலும் இலமே!
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
      • சி. ஜெயபாரதன் says:
        உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
        அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
        தமியர் உண்டலு மிலரே, முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
        புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுநர் உண்மையானே



        On Sat, Feb 4, 2012 at 2:12 PM, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> wrote:
        nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com 
        11:44 AM (2 hours ago)

        to me 

        பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

        வணக்கம்

        இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன். தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு.

        தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

        என்றும் மாறா அன்புடன்

        நந்திதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக