ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஹீரோ


பல்கலைக் கழகத்தில் பிரச்சனை வந்து அனைத்து வெளி மாநில மாணவர்களும் அவரவர் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.


அரவிந்தும் வழக்கம் போல தனது நண்பர்களை கடலூர் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக செல்கிறான்.


அங்கிருந்த இரண்டாம் நடை மேடையில் இருந்த ஒரு பலகையின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்களாம். ரயில் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்று அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்று.


சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சத்தம்...."அம்மாம்ம்ம்மா ம்மா ம்ம்ம் மா ...என்று தொடர்ச்சியாக கேட்கவே...


இவர்கள் கண்ணுக்கெட்டிய வரை எதுவும் புலப் படாததால்....என்னடா..பக்கத்துல சத்தம் கேட்குது...ஆனா பக்கத்துல ஒண்ணும் இல்லையே....மாடு சத்தம் மாதிரி இருக்குடா....என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன் ...ஆமாண்டா...பேயில மனுஷப் பேய் மாதிரி மாட்டுப் பேயும் இருக்கும்...." என்று தமாஷ் செய்து கொண்டிருதிருக்கிரார்கள்.


திடீரென..ஒரு வட நாட்டவர்...கையில் ஒரு தடியோடு வந்து...."உஷ்....உஷ்...உஷ்....ஜா..ஜா....ஜா...." என்று நடை மேடையிலிருந்து விரட்டவும்..


இவர்கள் மூவரும் எழுந்து அங்கு சென்று என்ன என்று பார்க்கிறார்கள்.


அங்கே...ஒரு நடுத்தர அளவு பசு மாட்டு கன்று ஒன்று தண்டவாளத்துக்கு அருகின் நின்றபடியே.....மேலே எழும்ப முடியாமல்....எப்படியோ.....சம தளத்திலிருந்து உள்ளே புகுந்து வந்த கன்று...தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டிருந்தது.


இவர்கள் விரட்டினாலும் அது நடந்து போய் மேலே சம தளம் சேர நேரமாகும். என்ன செய்வது.? என்று அறியாமல் நின்றிருந்த இவர்கள் ...குழப்பத்தில் இருந்தார்கள்.


நள்ளிரவு நேரமானதால் யாருமே இல்லை...வெறும் நான்கு பேர்கள் மட்டும் இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது..திடீரென தூரத்தில் பிரகாசம்...ரயில் வருவதற்கான அறிகுறி.


இப்ப என்ன பண்றது...? ரயில் வராப் போல இருக்கே.. நிற்க நேரமில்லாமல்..


அரவிந்த் உடனே கீழே குதித்து அந்த பசு கன்றை அலாக்காகத் தூக்கி நடை மேடை மேலே போட்டதும்...
அது கீழே விழுந்து நொண்டி எழுந்தபடி...சென்று விட்டது.


இவன் கிட்டத் தட்ட நூறு கிலோ எடை கொண்ட அந்த பசுவைத் தூக்கும் பொது அது திமிறி அதன் சின்னக் கொம்பை ஆட்டி இவன் கழுத்தின் வலப் பக்கத்தில் ஒரு இடி இடிக்க....நல்ல வேலையாக மேலே தோல் மட்டும் லேசாகக் கிழிந்தது. ரத்தம் வழிய...இவனும்...அங்கிருந்து எழும்பி மேலே குதித்து ஏறவும்...அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர்களை கடந்து செல்லவும் சரியாக இருந்ததாம்.


உடலெங்கும் புல்லரிக்க அங்கிருந்த நால்வருக்கும் திகில்.


அந்தப் பெரியவர்..."தம்பி...நீ பிழைச்சது பாக்கியம்...நீ அந்த பசுவை பிழைக்க வெச்சது புண்ணியம்" என்று சொன்னாராம்.
இதை வந்து அவன் சொல்லி கழுத்தைக் காண்பித்த போது . " நீ ஒரு உயிரைக் காப்பாத்தி இருக்கே...."
உனக்கு ஒண்ணும் ஆகாது...பகவானின் கருணை என்றும் நம் குடும்பத்துக்கு உண்டு..."
ஒரு காரணம் இன்றி ஒரு காரியம் அமையாது....அந்த பசுவைக் காப்பாற்ற உன்னை கண்ணன் இங்கிருந்து அழைத்திருக்கிறான்..." என்று நினைக்கும் போது ..எந்தன் நெஞ்சமும் நெகிழ்ந்தது.


இது நடந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது. இப்போது அரவிந்தின் காயம் தேவலை.


1 கருத்து: