வியாழன், 8 ஜனவரி, 2015

புவன ஞானி



 


 வாய்மையொன்றே வாழும் குகைக்குள்
பொய்யொன்றே பேசி ஆளும் மன்னன்
நான்கு விரற்கடை நீளத்தில் உலகையே
ஆள்பவன் அளப்பவன் கதையளப்பவன்


பாசத்தைப் பணயம் வைத்து பகடை ஆடுபவன்
ஈர நெஞ்சத்திற்கும் வீர நெஞ்சத்திற்கும்
பேதமின்றி கள்ளத்தனத்தை பங்கு வைப்பவன்
அசந்த போது அடிமனதை அசைத்து விடுபவன்

நெஞ்சத்துள் வஞ்சத்தை அடக்கி வைப்பவன்
புன்னகையில் விஷத்தைக் கூட விருந்தாய் வைப்பவன்
நண்பனையும் சுயநலமாய் சந்தேகிப்பவன்
கண்ணிருந்தும் இதயக்குருடன் ஊமையானவன்

ஏழுலகம் இயங்கும் இதயஅன்பு அச்சாணி
மனங்கள் உயரத்தானே உயரும் அன்பு உச்சாணி
புரிந்திடாமல் வாழும் புவன ஞானி யாரிவன்?
வாள் ஏதுமின்றி குத்திக் கொல்லும் நாக்கு தானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக