சனி, 1 ஆகஸ்ட், 2015

மன்னித்தருள்வீர்..!







எழுந்து வாருங்கள் 
கல்லறை உடைத்து 
இயேசுவிற்குப் பிறகு 
உயிர் கொண்டெழுந்த 
உத்தமப் பெயரை 
நீங்களும் நிலைநிறுத்த 
உடனே எழுந்து வாருங்கள்...!

'கலாம்' இல்லை 
எனும்  தைரியத்தில் 
ஊடகத்தை ஒட்டகமாக்கி 
உமைப் பற்றியே அவதூறு 
முட்களைத் தூவி
மகிழ்ச்சிப் பயணம் 
செய்து மகிழும்  
வீண் விலங்குகள்..!

தங்கள் முகத்திரை 
கிழித்து முத்திரை 
பதிக்கும் அவலங்கள் 
நல்ல மனங்களை 
நிமிடா நிமிடங்கள் 
பாதிக்கின்றதே தமிழா...!

செத்த பாம்பை 
அடித்து அவார்டு 
வாங்கியே பழக்கப்பட்ட 
அற்ப ஜீவன்கள் 
பேனா பிடித்துவிட்டால் 
பித்தலாட்ட எழுத்துக்களும் 
காவியம் படைக்குமென  
தலைக் கனத்தில் 
உனது பொன்னுடல் 
பூமிக்குள் புதையவே 
காத்திருந்தார்ப்போல் 
காலம் நேரம் 
அறியாது கட்டவிழ்க்கும்
வஞ்சகக் கயவர்கள்..!

மாணவர் நலனே 
முழு மூச்சென நாடி 
உந்தன் கோடி 
மூச்சை நிறுத்திக் 
கொண்டாய்...!
அறிய ஞானி 
நின்புகழ் வான்புகழாக 
அவர்தம் காதுகளுக்கு 
காய்ச்சிய ஈயமாகி 
உம்மேலும் மேலும் 
களங்கப் பத்திரிகை 
வாசிக்க எத்தனித்த 
பித்தர்களும் எத்தர்களும் ....!

இங்கே அவர்களை 
நிறுத்தச் சொல்ல 
எவருமே இல்லையா?
இத்தனை ஆண்டுகள் 
சேகரித்த உழைப்பின் 
பலன்கள்  வீணாவதேன் ..?
தேன்கூட்டை அழிக்கலாம்....!
நம்பிக்கைக்  கூட்டை 
சிதைக்கலாமா?
உம்மை  நம்பியவர்கள் 
அனைவரும்  நடுத்தரமாம் 
தானே  உயர்தரம் 
என்றெண்ணி கொண்டே 
கீழ்த்தரம் குறைக்கிறது..!

உத்தம தமிழன் 
நீங்கள் வரமாட்டீர்கள் 
இந்தப் பொல்லாத 
நாட்டிற்கு உழைத்த
நேரங்கள் அத்தனையும்  
விழலுக்கு இறைத்த நீர்
தானோ... ?

ஆன்மா அடங்கியதும் 
அராஜகத்தின்  ஆக்கிரமிப்பு 
ஆச்சரியம் தருகிறது..!
ஊடகத்தை பொய்மூட்டை 
ஏற்றி உலாவரும்  
ஒட்டகமாக்கி உலகெங்கும் 
ஓட விரட்டினால் 
தாங்குமா எங்கள் நெஞ்சம்...?

புதிய ஏற்பாட்டில் 
சிலுவை சுமந்த 
இயேசு சொன்னது 
போல் தாங்களும் 
இவர்களை மன்னித்து 
அருள் செய்வீர் 
நம்புகின்றோம் ..!

1 கருத்து: