திங்கள், 7 அக்டோபர், 2013

சக்திரதம்






உக்ரஸ்வரூபிணி  சரத்கால நாயகி 
மகிஷனை வதமிட்ட  ஸ்ரீமஹாகாளி ....நீ..!

நவவித பூஜையும் நவவித அலங்காரமும் 
வன்னி இலைகளில் ஸ்வர்ணஸ்வரூபிணி..நீ 

விழிகள் நனைந்திட தேவியுனைத் தொழுதேன்...
தாள்பணிந்தேன்  நிந்தன் கருணை எனக்கென்ன, நீ 

எட்டாத வானமோ....?  கிட்டாத  வரமோ?
தட்டாதே....தந்திடுவாய் ..ராஜநாக ஆசனத்தில், நீ  

அலங்கார பவனி வரும் பாவானியே -பொன்வீணை 
மீட்டிடும் ராஜமாதங்கியே -  மரகதமே, நீ 

மன வீணையினை உறங்காது நீலாம்பரி 
மீட்டிடவே விரைந்தென் அகம் வாருமே..நீ 

ரக்த பீஜனை வதமிட்ட ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி 
உன்மத்தங்கள் அழித்து உன்னதம் தாருமே, நீ 

வித்தைகள் நல்கும் நாயகியே சிவதூதியே 
உனைக் காணக் கோடிக் கண்கள் ஒளிருமே, நீ 

நவராத்திரி நாயகியாய் உந்தன் தேவி மாகாத்மியம் 
போற்றித் துதி செய்தோம் நலங்கள் நல்கிடவே, நீ 

இணையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்திடவே 
சக்திரதம் பிடித்திழுத்தோம் சடுதியில் இறங்குவாய், நீ.

1 கருத்து: