திங்கள், 18 ஜூன், 2012

மணி மகுடம்...!

 



 நான் எனும் நீ
என்னுள் ஒளிந்து
ஒளிரும் புதையலாய்
வாழ்த்தி வாழ்த்தி
உயர்த்தி வைத்தால்
பாழ்படுமோ...
தாழ்ந்திடுமோ...?

உள் ஒளித்து
உரு மறைத்து
கண்ணால்  மொழிந்து
எண்சாணுக்குப்
பிரதானமாய்...
ஓரத்தில்...!

ஓர் பிடியாய் உலகை
உள்வாங்கித்
தருவிக்கும் தருவே
திருவே....அருவே....!

அறிவெனும் ஊற்று
அன்பெனும் ஊற்றில்
தேங்கி நின்று....
சுடர்விடும் 

சிந்தாமணி..!
அள்ளப் பெருகும் 

அட்சயம்...!

நீ இருக்கும் உடலில்
வேரூன்றக் கொண்டோம்
உள்ளுள் ரத்தினங்கள்..!
மணி மகுடத்தில்
ஜீவனின் ஆதாரங்கள்
ஆழ்கின்றாய் அவர் மனத்தை
புதையலாய்....நிறைந்து
பொங்கி வழியும்  குடம்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக