புதன், 20 ஜூன், 2012

நிகழ்வுகள்




கல்லடி பட்டதால் 
கலங்கிய மரத்தின்
கிளைகள் தவற 
விட்டன பழங்களை...!
சொல்லடி பட்டதால்
கலங்கிய மனமும்
கொட்டியது கவிதையாய்..!

---------------------------------------------

நீ விட்ட அம்பு 
ஏனோ....
பழத்தை விடுத்து
பறவையை விடுத்து
என் நெஞ்சில் 
பாய்ந்தது....
ஒ.....உன் இலக்கு
என் இதயமா..?

----------------------------------------------

பச்சைக் கிளிகளே...!
நித்தம் உங்களின் 
கொஞ்சு மொழியில் 
இச்சை இசையைக்
கேட்டுத் தான் 
நானும் வேரோடு
போராடிக் கொண்டிருக்கிறேன்...
ஆலமரமாக....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக