ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சகலகலாவல்லி



ஹம்ஸ வாகனத்து வேணி நிந்தன்
கமலபாதத்திலே சிரசு வைத்தேன்..

ஆடி நடுங்குதடி உயிர் ஓசையுடன்
நிந்தன் பாதப் பதமலர் பற்றிவிட்டேன்

நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்

நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி   
அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி

பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது

மரகத வல்லியே மனங்கமழும் அல்லியே ...
சகலகலா வல்லியே மனமிரங்கென் அன்னையே..!


1 கருத்து: