செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அருவி ...!

 
 

மலையரசி பெற்ற மகள்
பொங்கு மனம் கொண்ட மகள் 
ஆழ்கடலை ஆளவென்றே
கொஞ்சச்  சிலிர்த்தவள்
அன்னை மடி தழுவி
அன்பின் பிடி
நழுவிச்
சிரிக்கும் செல்வமகள்
தாயகம்  கடந்து
சிறுமலை பொழியும்
அருவியாய்
வனங்கள் கடந்து
வளங்கள் சுமந்து
தாயின் கனவை
நனவாக்கும் தேடலில்
தொலைந்து
தரை விழுந்து
துடித்து நெளிந்து 
ஆற்றின் வழி கண்டு
மகிழ்ச்சி வெள்ளமாகி
ஏற்றமும் தாழ்வும் இலக்கை அடைவதன்
இலக்கணத்தைச் சொல்லிக் கொண்டே
உயரத்தின் ரகசியத்தை
ஆழத்தில் பகரும் வேகம்
வரவேற்கும் கடலலைக்குள்
சங்கமித்தவள்
அன்பில் மூழ்கியே
ஓலைதனை அனுப்புகிறாள்...முத்துக் கடல் காண
வானம் விட்டு 
பொழிய வேண்டுமென

மேகத்திற்கு...!

----------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக