வியாழன், 7 ஜூன், 2012

கண்ணீர்ப் பூக்கள்...!

வானமாய் நீ
சின்ன மனசில்..
கூடிவளரும் 
சில்மிஷ 
சந்தோஷங்கள்..!

மழை பட்ட 
அறிகுறி போல்..
மண் மணக்கிறது..
மயில் கண் மூடி 
தோகை விரிக்க..
மேகம் கனக்க....
தென்றல் மெல்ல 
சீண்டி விளையாட..!
அந்தி சாயும் 
நேரம்தனில்
பன்னீர் புஷ்பமாய் 
வான் பொழிய
சுதந்திர மனதிது...
இனிமையை 
ரசித்துக் கூத்தாடி 
பறக்கும்வேளை..!

உன் வானத்தின் 
ஒற்றைப் பறவையாய்..
சிறகு விரிக்கையில்...
ஆனந்தமாய்க் 
கண்ணீர்ப் பூக்கள்...
மழையோடு 
கலந்து..மண்ணில் 
மணக்கிறதே....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக