வெள்ளி, 8 ஜூன், 2012

ராஜநடை

 

கதிரவன் கடல் நீராடி
எழும் புதிய காலை ..!
வெண்ணிலவின் 
மந்தாரப் புன்னகை முகம்..
வெட்கத்தில் தலைகுனிந்து
ஒளிந்து கொள்ள ...!

பரந்த வானத்தில் 
மேகத் திரை விலக்கி
முகம் புதைக்க..!
தவித்த இதயம் இரவில் 
வடித்த தாரைகள் 
பனித் துளிகளாய்..!

நுனிப் புல்லின் மேலமர்ந்து
கதிரவனுக்கு தூது சொல்ல
மறைந்து விடாத கதையிது
நித்தம் ராஜநடை போடுது..!

முத்து முகம் மலர வைக்க..
கதிரவன்...வான் முழுதும் 
வாரி இரைப்பான்..
சொர்ண முத்து மாலைகள்..!

வெண்ணிலாப் பெண்ணவளின்
சங்குகழுத்தை அலங்கரிக்க..!
விசித்திரப் பெண்ணாக...
பூமி பார்த்து பூ உதிர்பாள்,,.!
=================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக