On Sat, Feb 4, 2012 at 2:12 PM, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> wrote:
nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com 11:44 AM (2 hours ago)
to me
பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு
வணக்கம்
இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன். தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு.
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
பவள சங்கரி
கனடா வாழ் விஞ்ஞான கவிஞருக்கு..
எங்கள் மதிப்பு மிக்க திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு..
படிக்கும் பொது அகமகிழ்ந்தேன்.,
நாடகங்கள், கவிதைகள், வாரா வாரம் படைப்புகளாக
வெளியிட்டு அவரின் தரத்தை உயர்த்திக் கொண்டே
இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக எழுதப் பட்ட
தங்களின் வாழ்த்துப் பாடல் அருமை…!
வாழ்த்தையும் தெரிவித்து…..இந்த உன்னத படைப்பைத் தந்து சிறப்பித்த உங்களுக்கும்
எனது உளமார்ந்த நன்றிகளை..இங்கு பவளசங்கரியோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்ள மகிழ்கிறேன்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஈழத் தமிழ்த் தோழர் திண்ணையில் என்னைச் சீராட்ட
தோழியர் இருவர் தமிழகத்தில் இனிதாய் வழிமொழிய
ஊழியன் பூரித்தேன் கனடாவில் கனிவாக நன்றியுடன்.
++++++++++++++++++++
சி. ஜெயபாரதன்.
சிறியோனை யாரரிவார்
பாரறிவார், யாரறிவார் என்றுதானே இருக்க வேண்டும்? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலு மிலரே, முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே