காதல் ஹைக்கூ.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் ஹைக்கூ.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மே, 2014

முதிர்ந்து விட்டால்..!

 
 
 
 
 
 
தென்றலின் வீதி  உலா 
மணத்தைத் தொலைத்தது  
மல்லிகை ..!

கம கமத்தது மரம்
வெட்டுப் பட்டது 
சந்தனம்...!

கொடியை உயர்த்திப் பிடித்ததும் 
வெற்றுக் கொடியானது 
வெற்றிலை..!

தோகை முதிர்வை அறிவித்ததும் 
ஆலையில் சிக்குண்டது 
கரும்பு..!

கர்ப்பகிரஹத்துள் அநீதி 
வெளிநடப்பு செய்தது 
தெய்வம்..!

காற்றால் நகர்ந்தது 
புயலால் புரண்டது 
பாய்மரம் ...!

வெப்பத்தால் பறந்தது 
கனத்தால் விழுந்தது 
மழை..!

மௌனத்தில் பேசியே 
தவம் கலைத்தது 
மேகங்கள்...!

அலைந்து அலைந்து 
வாசம் தேடியது 
தென்றல்..!

உயர்ந்து நின்றாலும் 
என்ன பயன்? அறியாதிருந்தது 
இமயம்...!

தாகம் தீர்க்கவும்
இயலாததை எண்ணியழுதது 
கடல்...!

மண்ணோடு  கிடந்ததை 
தன்னோடு  தாங்கிக் கொண்டது 
மண்பானை....!


சிப்பியில் துளி விழ
மௌனத்தில்  உருவானது
முத்து,


இதயத்தில் அடி 
இமைகள் மூட உருண்டது 
கண்ணீர்..!

ஆகாயத் தாமரைகள் 
அந்தரத்து ஆனந்தங்கள்  
பறவைகள்..!

ஒவ்வொரு ஜீவனின் 
உன்னத எண்ணங்கள் 
புத்தகங்கள்...!

அதுவும் இதுவும்  
அவனும் அவளும் தான் 
உலகம்..!

தடுக்கியதும் தவறியதும் 
சோர்ந்ததும் தூக்கி நிறுத்தும் 
நம்பிக்கை...!

கண் முன்னே 
நம்மைக்  கட்டிப் போடுது 
கணினி..!

உயிர்ப் பழுத்ததும் 
பாசத்துடன் இழுக்கும் 
மரணம்...!

திங்கள் பத்து கழிந்ததும் 
புகுந்தது பூமிக்குள் 
பிறப்பு..!

கரையான் கட்டி முடித்து 
நெட்டி முறித்ததும் புகுந்தது 
பாம்பு...!


தென்றலின் வீதி  உலா 
மணத்தைத் தொலைத்தது  
மல்லிகை ..!

கம கமத்தது மரம்
வெட்டுப் பட்டது 
சந்தனம்...!

கொடியை உயர்த்திப் பிடித்ததும் 
வெற்றுக் கொடியானது 
வெற்றிலை..!

தோகை முதிர்வை அறிவித்ததும் 
ஆலையில் சிக்குண்டது 
கரும்பு..!

கர்ப்பகிரஹத்துள் அநீதி 
வெளிநடப்பு செய்தது 
தெய்வம்..!

காற்றால் நகர்ந்தது 
புயலால் புரண்டது 
பாய்மரம் ...!

வெப்பத்தால் பறந்தது 
கனத்தால் விழுந்தது 
மழை..!

மௌனத்தில் பேசியே 
தவம் கலைத்தது 
மேகங்கள்...!

அலைந்து அலைந்து 
வாசம் தேடியது 
தென்றல்..!

உயர்ந்து நின்றாலும் 
என்ன பயன்? அறியாதிருந்தது 
இமயம்...!

தாகம் தீர்க்கவும்
இயலாததை எண்ணியழுதது 
கடல்...!

மண்ணோடு  கிடந்ததை 
தன்னோடு  தாங்கிக் கொண்டது 
மண்பானை....!

சிப்பியில் துளி விழ  
வாய்மூடி உருவானது 
முத்து..! 

இதயத்தில் அடி 
இமைகள் மூட உருண்டது 
கண்ணீர்..!

ஆகாயத் தாமரைகள் 
அந்தரத்து ஆனந்தங்கள்  
பறவைகள்..!

ஒவ்வொரு ஜீவனின் 
உன்னத எண்ணங்கள் 
புத்தகங்கள்...!

அதுவும் இதுவும்  
அவனும் அவளும் தான் 
உலகம்..!

தடுக்கியதும் தவறியதும் 
சோர்ந்ததும் தூக்கி நிறுத்தும் 
நம்பிக்கை...!

கண் முன்னே 
நம்மைக்  கட்டிப் போடுது 
கணினி..!

உயிர்ப் பழுத்ததும் 
பாசத்துடன் இழுக்கும் 
மரணம்...!

திங்கள் பத்து கழிந்ததும் 
புகுந்தது பூமிக்குள் 
பிறப்பு..!

கரையான் கட்டி முடித்து 
நெட்டி முறித்ததும் புகுந்தது 
பாம்பு...!

கர்ப்பக் கிரஹத்துள் 
அநீதி வெளியேறியது  
தெய்வம்..!

நாற்பது வயதைக் 
கடந்ததும் எட்டிப் பார்ப்பது 
சக்கரை..!

பருவம் தொட்டாள் கன்னி 
உரிமை கொண்டாடினான் 
கணவன்...!

நிலம்  பார்த்துக் கதறியது  
கால் வலிக்குதென்று  
பூக்காத மரம்....!

செய்த தவறுகளை 
சரியாக்கி விடும் 
பரிகாரம்..!

வரவை எண்ணி 
செலவை எண்ணாதவன் 
மூடன்..!

இயற்கையை கன்னியாகக்  
கட்டுக்குள் வைத்தான் 
இறைவன்...!


நாற்பது வயதைக் 
கடந்ததும் எட்டிப் பார்ப்பது 
சக்கரை..!

பருவம் தொட்டாள் கன்னி 
உரிமை கொண்டாடினான் 
கணவன்...!

நிலம்  பார்த்துக் கதறியது  
கால் வலிக்குதென்று  
பூக்காத மரம்....!

செய்த தவறுகளை 
சரியாக்கி விடும் 
பரிகாரம்..!

வரவை எண்ணி 
செலவை எண்ணாதவன் 
மூடன்..!

இயற்கையை கன்னியாகக்  
கட்டுக்குள் வைத்தான் 
இறைவன்...!









ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

காதல்...குயில்கள்




வாழ்க்கை வண்டியின்
ஓடும் சக்கரம்
காதல்..

வாய் திறந்த சிப்பிக்குள்
வந்து விழும் நீர் துளி
காதல்..

ஊமையின் 
குரல்
காதல்..

ஏழேழு ஜென்மத்தையும்
இணைத்துவிடும்
காதல்..


பூர்வ ஜென்மத்தை
உணர்த்திவிடும் 
காதல்...!

நிறங்கள்  
காணாது
காதல்...!

குகை மனதுள்
கோடி தீபம்
காதல்..!

புத்தகங்கள்
தேடாது...
காதல்..!

அறிவை 
ஆட்கொள்ளும் 
காதல்..!

இருப்பதையும்
இல்லாததையும்
இணையாக்கிடும்..
காதல்.!

பிரிந்து சென்றாலும்
பிரிவதில்லைக் 
காதல்..!

தொலைக்கும்
தேடும்..
கண்டெடுக்கும்
காதல்..!

இறைவன் விரித்த
மாயவலை..
காதல்..!

அறிவும்..
அறியாமையும்..
காதல்..!

இல்லாத இதயத்தை 
நோய் கொண்டாட வைக்கும்
காதல்.!

பொருளும்..போகமும்
அறியாது
காதல்..

சித்திரம் (பொய்)
பேசும்
காதல்..!

விசித்திரப் 
பேய்..
காதல்..!

ஔவியம் 
காணாது
காதல்..!

நாணலாய்
மாறும்
காதல்..!

காற்றோடு 
வைரஸ் 
காதல்..!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும்
காதல்...!

கோபத்தைக் 
கொன்றுபோடும்
காதல்..

எதிர்காற்றை 
தூசியாக்கும் 
காதல்..

மனதை
கண்ணாடியாக்கும்
காதல்..!

ஆரம்பமும்
முடிவுமற்றது
காதல்..!

இறப்பில்லை
கொல்லப்படுவதில்லை..
காதல்..

ஒரே வாசல் 
ஓர் உணர்வு..
காதல்..!

ஆன்ம ஞானத்தை 
மாயத்திரையிட்டு
மறைத்திடும் 
காதல்..!

பஞ்சிகரணத்தை 
இணைக்கும்
காதல்...!

நெல்லோடு...
உமியிது
காதல்..!

அஞ்ஞானம் 
விஞ்ஞானம் 
அறியாது 
காதல்..!

அறியாமையின்
தோழன் 
காதல்..

ஆத்மஞானியின்
பரம எதிரி
காதல்..!

சித்தம் 
அடக்கும்
காதல்..!

உருவில்லாமல்
உருவம்  அழித்திடும்
காதல்...!

ஞானக்கண்..
ஊனக்கண்..
வேறில்லை..
காதல்...!




இதயத்தின் 
ஊக்கபானம் 
காதல்..

உள்ளத்தின் 
அருமருந்து
காதல்..

தள்ளியிருந்தாலும்
உள்ளிருந்து பார்க்கும்
காதல்..

சொல்லாததை 
மனதால் தொட்டுணரும்
காதல்

அறிவை
பூட்டிவிடும் 
காதல்

முகத்தில் 
ஓவியம் தீட்டும்
காதல்

அறியாதவர்க்கு
தெரியாத நட்சத்திரம் 
காதல்

இதயமே...
தேன்கூடு..!
காதல்...!

இயற்கையோடு 
பேசும் 
காதல் !

இசையோடு 
சங்கமிக்கும்
காதல்..

உணர்வுகளை
குழந்தையாக்கிடும்
மாயாவி
காதல்...

கண்களில் 
நிழலாய்க்
காதல்.

காலடியில் 
சொர்க்கம்
காதல்...!

புதிதாய் 
பிறவி...
காதல்...!

தனி உலகம்...
இரு(இரு)-தய சங்கமம்
காதல்...!

வெட்டவெளியில்
இரட்டைப் பறவை..
காதல்..!

நுழைந்ததும் 
குருடாக்கும் 
காதல்....!

உலகத்தை 
பந்தாய் தூர வீசும் 
காதல்...!

கண் நுழைந்தால் 
நிஜமில்லை
காதல்...!

சிந்தையைத் 
துளைப்பது 
காதல்..!

அண்டத்தின் 
அச்சாணி 
காதல்..!

இதயத்தின்
துடிப்பு
காதல்..!

உள்ளிருந்தாலும்
உரக்கப் பேசும்
காதல்..!

மதத்தையும் 
மிதிதிடும் 
காதல்..!

புல்லையும் 
புல்லாங்குழலாக்கிடும் 
காதல்..!

இரும்பை தீயின்றி 
மெழுகாய் உருக்கிடும்
காதல்..!

மருந்திடாமல் 
மயங்கடிக்கும்
காதல்..!

வெற்றுப் பேனாவிலும்
கவி எழுதிடும் 
காதல்..!

காலத்தை 
கடந்தும்  பேசும்
காதல்..!

காமதேனுவின்
அற்புத மடி
காதல்..!

உயிரோடு 
கொன்றுவிடும்
காதல்...!