ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நித்யகல்யாணி










வெற்றி நல்கும் நாயகியே - பயமில்லா 
நெஞ்சத்து மணிபூரகமே - அம்பா 

ஒளிலோகங்களில் கோலோட்சி 
ஆளும் ஜெகதாம்பிகே..ஜெகதம்பே 

மின்னல் கொடியே  காருண்யமே 
பவதாரிணி நீயே - ஸ்ரீதளா தேவி  

ரத்னாபரணங்கள் பூண்டு இந்த்ர 
தனுஷும் ஏந்திய பரிபூரணியே..!

பூலோக ஜ்வாலையில் பூவாகச் 
சொரிந்து கருணைக் கண்களால் 

ஈரேழு லோகங்கள் ஆள்பவளே - 
சுகானுபவத்தில் ஆனந்தலஹரி நீயே..!

சக்தியே... ஸ்ரீசக்ர நாயகியே - நித்யகல்யாணி 
சுதர்சன ஜீவத்துள் வர்ஷிக்கும் வசுந்திரியே  

யாவர்க்கும் அருளும் பங்கயவல்லி 
யாதுமாகிக்  காக்கும் சௌதாமினி 

வாக்தேவி யே நீலாக்னி நீல சரஸ்வதி..!
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே..!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக