திங்கள், 19 மே, 2014

வில்லும் வானவில்லும்



வானில் வில்லென 
வளைந்த வண்ணக் 
கோடுகள் 


காணும் கண்களுக்கு 
ஆச்சரியத்தில்  
வண்ண விருந்து 

கனிந்த மனங்கள் 
அகலாது காணும் 
வானவில்..!

சிலமணித்  துகளில் 
மனத்துள் நிமிர்ந்திடும்
மந்திரமாம் மேகங்கள்  
தீட்டிடும் அற்புத 
ரங்கோலிக் கோலம்...!

வில்லில் குறிகொண்ட 
அம்பு இலக்கெனக்  
குத்தும் குதறிக் கிழித்துக் 
குருதியைச் சிதறும் 

கண்டோர் மனம் 
ஆவேசத்தில் பதைக்கும் 
சிலமணித் துகளில் 
உயிரைப் பறிக்கும் 
எந்திரம் 

மனரோகங்கள் எய்தும் 
ஆக்ரோஷக் கோலம் 
நளினத்தின் வாளாக 
'வில்'லை  யார் சேர்த்தது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக