திங்கள், 7 மே, 2012

நிகழ்வுகள்


ஒரு கல்லின் அடியால்.. 
உலுக்கிய கிளையில்.
விழுகிறது பழங்கள்..!
ஒரு சொல்லின் அடியால்..
கலங்கிய மனத்தில்..
கொட்டுகிறது.. கவிதைகள்..!
---------------------------------------------
வில்லை விடுத்த  அம்பு 
மரத்தை விடுத்து..!
மனத்தில் பாய்ந்தது..!
ஒ..உன் இலக்கு...
என் இதயமோ..!
-----------------------------------------------
பச்சைக் கிளிகளே..நித்தம் 
உங்கள் இச்சை மொழிகளை 
சுகமாய்  கேட்டு சுவாசித்து
நான் வேரோடிருக்கிறேன்...
ஆலமரமாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக