ஞாயிறு, 13 மே, 2012

உதிர்ந்த சருகுகள்..

 
கனிவு கொண்ட
இனிய சொற்கள்..
இதயம் தாண்டி 
உள்ளே போகும்..
ஏனோ..ஏக்கத்தோடு...!
மனம் வானம் பார்க்கும்
இவர்களிருப்பதால் 
தானா,,?  வானமே நீ 
மும்மாரிப் பொழிகிறாய்...!!

மையிட்டுப்... பொய்யிடாத 
பூங்கண்களில்... 
பரிவு தரும் நேசக்க்  
கரங்களும்..
வேலி போடாத 
அன்பிற்கும்..!
ஒவொரு நாளும் ...!!
ஞாயிறுக்காகக்..
ஏனோ ..ஏக்கத்தோடு...!!
காத்திருக்கிறோம்...
குழந்தைகளாய்....!

இல்லங்களில்..
முதியோர்கள்...
நாங்கள்....!
நன்றியோடு...
மனங்கள் 
நினைக்கும்  
இப்போதாவது
இறைவன் 
இதயங்களைக்
காட்டினாரே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக