ஞாயிறு, 13 மே, 2012

கம்பிமேல் நடக்கும் வாழ்வு..!

 
 மேகம் போல் மாறி 
மாறி மனதின் நிலை 
 விழாமல் தடுமாறி...!

புதைந்து போன உண்மைகள்
மெல்ல  உயிர்த்தெழும்...
உணர்வுகள் புதைந்திடும்..!

ஒவ்வொரு இதயத்துள்ளும்
இதே போராட்டம்..
பாசத்தில் இருந்து பதவி வரை..

அறியாமல் நடந்திடும்
மனம் நித்தம் கம்பி மேல்...
விழுவதும் அடைவதும் ..வாழ்வு..!

தெரிந்தும் கடக்கிறோம்..
அடைந்து விடும் ஆர்வத்தில்
விழமாட்டோம்... நம்பிக்கையில்...!

கூத்தாடி வாழ்வு தான்..!
மனிதர்கள் எங்கும்..
மனதுக்குள் என்றும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக