திங்கள், 7 மே, 2012

கவிதையொலி.....

 


நாணத்தினால்
தாமரை...
வண்டுகள் வரவு..!
--------------------------------
நீ சூடிய மல்லிகை..!
நறுமணம்...
எனைத்தேடி..!
------------------------------
விற்கும் வரை மட்டுமே.. 
ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
செருப்பு...!
----------------------------------------
வளைந்த வில்லும்
நீந்தும் கெண்டையும்..
உன் முகத்தில்..!
-------------------------------------------
நிறைகுடத்தை
சுமக்கிறாள்
கர்ப்பிணி..!
---------------------------------------
கால் வலிக்காதா..
சோர்வே வராதா,,..?
கடலலைகள்.
---------------------------------------
கனல் கொண்டு பறக்கும்
புதுமைப் பெண்..
மின்மினி...!
----------------------------------------
சொன்ன வாக்கு பலிக்குது...
வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!
--------------------------------------------
மூடிய விழிகளுக்குள்
வண்ணச் சித்திரம்..
கனவு..!
--------------------------------------
கட்டித்தொங்கப் போட்டாலும்
சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள் 
சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!
----------------------------------------------
சருகாகும் மலர்களே...
வரம் வாங்கி வந்தீர்களா..
சந்ததி வேண்டாம் என்று..!
---------------------------------------------------
கண்டெடுத்தேன்..
புதையலை..
உன் மனம்..!
------------------------------------------------
மௌனமாய்...
உயிர் போராட்டம்..
எறும்புகள்..!
-------------------------------------------------
உடலுக்குள்ளே...
என்றும் குழந்தையாய்..
மனம்..!
------------------------------------------------
திருமணம்..
இருமனக் கனவின்..
அரிச்சுவடி..!
----------------------------------------------------
கர்ப்பத்தை கலைகாதீர்..
விதையோடு பழங்கள்..!
வயிற்றிலா விதைப்பது..?
---------------------------------------------------
பாதத்திற்கு பாதுகாப்பு
கைகளுக்கும் தற்காப்பு
செருப்பு..!
-------------------------------------------------
நாளைய நெல்லுக்கு..!
நாற்று நடவு...இன்று..
பட்டினியோடு..!
--------------------------------------------------
உதிர்ந்த பூக்களை
வாரி அணைக்க
தென்னங்குச்சிகள்..!
-----------------------------------------------------
முகம் காட்டும் கண்ணாடியே..
என்ன கோவம்..என்மேல்..?
எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை....!
---------------------------------------------------------
உடலுக்குள்ளே..
விஷமருந்து ..
உயிரோடிருந்தது..
பட்டாசு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக