சனி, 12 மே, 2012

வைகை சீதை....

 
மிதிலை நகரத்து நாயகி
மேனகை அல்ல
இந்த ஜானகி ! 
வைகை நதி வற்றி
காவிரிக் கண்ணகியாய்
கோவலன்
கைவிட்ட காரிகை ! 
இராமன்
துரத்தித் பிடித்து 
காட்டுக்கு ரகசியமாய்  
விரட்டி விட்டக் 
கவரி மான் !
சிசுவோடு பால் கொடுக்கும்
பசு மடந்தை ஒரு 
காம தேனு !
 
அன்னியன் காப்பாற்ற  
பின்னிவள்
கற்புக் கணவன்
ஏக மத்தினி விரதன்
அற்பப் பொருளாய் 
மிதிபட்டு 
சிற்பச் சிலை ஆனவள் ! 
கர்ணன் தம்பி இலக்குவன்
காரிகை அறியாமல்
காட்டுக்கு இழுத்துச் செல்வான் 
தங்கத் தேரில் !
அபலைச் சீதாவைக்
காப்பாற்றிக் 
கைதூக்கித் துணையாய் 
கரை ஏற்றி விட்டவன், 
ராமன் 
காலணி சுமந்த
பரதன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக