ஞாயிறு, 13 மே, 2012

ஆயுசு பூரா.... ஆனந்த ராகமாய்...!

 
உறங்கும் உயிரை
அசைத்து விட்டாயே..
சிப்பியின் வாயைத்
திறந்து விட்டாயே..
இதய ஓட்டிற்குள்
ஒளிந்து கொண்டாயே
உன்னையே உலகமாய்
எனக்குள் தந்தாயே.....!

வாசற்கதவில் வெள்ளி
மணியாய்..
இருட்டுச் சுரங்கத்தில்
வைரமணியாய்..
உள்ளங்கைகளில்
ஆயுள் ரேகையாய்..
ஆயுசு பூரா....
ஆனந்த ராகமாய்...! 

பாறை மனதுள்
பசுங்கொடியாய்..
பள்ளிகொண்ட மனதின்
பான்ஜசன்யமாய்..
சிரித்து ரசிக்கும்
சிந்தாமணியே...
உனக்குள் வசிக்கும் 
கற்பகத் தருவே...

ஓங்கி உலகளந்த
பாத மணிசிலம்பே..
ஓயாமல் பேசும்
மௌன குருவே..
ஓடும் ஆறும் உன்
பெயர் பாடுமே..
ஓரங்க நாடகத்தின்
ஒய்யார அரசே..

பாடாத தேனீ
எனக்குள்ளும்
பாட்டுத் தரும்
கலையரசே....
சிற்பி கை நழுவி
என் இதயம்
விழுந்த மாய
உளியே...மந்திரமே

கடல் கண்டெடுத்த
வலம்புரி சங்கே..
கடல்சிப்பி கண்டெடுத்த
சிற்ப உளியே..
பவளப்பாறையின்
மரகத வீணையே..
மந்திர மலைக்குள்
மகத்தான சுவாதி...நீ..

ஓய்ந்து கிடந்த நெஞ்சத்தில்
பன்னீர் தெளித்து
பட்டாடை கட்டிப்
பார்த்த புனிதன் நீ...
எழுந்துவிட்ட இதயத்தில்
இன்ப ஊற்றைத் தேடி
நித்தம் நீராடும்....
கண்ணனும் நீ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக