திங்கள், 1 ஜூலை, 2013

கருமை...!


மூலை முடுக்கெங்கும் 
இருட்டு வண்ணம் பூச 
அரங்கம் முழுதும் 
கருமை...!

எங்கிருந்தோ மின்மினி 
வெளிச்சத்தை சொல்லிப் 
போக...
ஜாதிக் கருமை விலகும் 
வழி....உண்டோ? 

காற்று அனைவருக்கும் 
பொது..
கடல் யாவர்க்கும் பொது 
வானம் யாவர்க்கும் பொது 
பூமி யாவர்க்கும் பொது 
ஐவவரின் கையில் தூங்கியவன்  

பூமியைக் கீறி கூறு 
போட்டு 
பழகிவிட்டதால் பிறப்பையும் 
கூறு கட்டிப் பிரித்து 
பிரித்ததையும் பிரித்துப் 
பிரித்துப் பிரித்து 
ஆயிரம் பகுதிகளால் 

மனம் பிரிந்து..
விரிந்த பூமியில் 
எண்ணச்  சுருக்குடன் 
ஒரே பூதத்திடம் 
அடிமையாகினான்...!

இந்த ஜாதியை 
யார் வீட்டிலிருந்து 
வீதிக்கு விரட்டுவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக