திங்கள், 1 ஜூலை, 2013

பிறவி


ஏ ....மரமே...!
ஏன் இப்படி நிற்கின்றாய்?
பதில் தெரியவில்லையா?
சொல்லித் தந்ததை 
மறந்ததற்காக 
மர அடிகோலால் 
பிஞ்சுக் கைகள் 
வெம்பி வெதும்ப 
அடித்தேன்....
அப்போது நான் 
ஆசிரியை...!

மதிய இடைவேளையில் 
"அந்த மாங்கொட்டை டீச்சர்"
அடிச்சுட்டாங்கப்பா ...!
மாம்பழத்தை 
ருசித்து விட்டு 
கொட்டையைப் ஆத்திரத்தில் 
புதைத்தான்..!

அதே பள்ளி....
என் கண் முன்னே 
அதே வகுப்பறை...!
அன்று அழுதுகொண்டே 
நின்ற சிறுவன் 
இப்போது ஆசிரியன்..
நிற்கிறேன்....
நான்....மரம்..!

1 கருத்து: