வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உயிர்



ஒரு இருமல் போதுமே
பாசக்கயிறாக அரவணைக்கும்
ஸ்டெதஸ்கோப்..!

இதயத்தை விட்டு 
இரும்புப் பெட்டியைத் 
துழாவும் இயந்திரம்..!

உயிருக்குப் பின்னால்
பூஜ்யத்தைச் சேர்க்கும்
அறுவை சிகிச்சை..!

நோயாளிகள் கழிவுகள்
தாங்கும் மேடுகளாய்
வானம் பார்த்தபடி..

மருத்துவரோ பணம் 
கொத்தும் பறவையாய் 
வட்டமடித்தபடி..!

சின்ன இருமலுக்கு
எழுதப் படுவது மருந்தா..? 
மரண சாசனமா?

பிணக் கிடங்கின் முன்பும்
போராட்டம்...மறியல்
இறப்பு..மருந்தாலா?
மருத்துவராலா?!

ஜெயஸ்ரீ ஷங்கர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக