ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

பத்துமலை..!





























முத்துக் குமரா...
பத்து மலையானே..
அங்கிருந்தே எமை .
இங்கு பார்க்கவா..!
அறுபதடி உயரத்தில்
திருக்கண்கள்..!

உன் காலடியில்
நித்தம்.. நிந்தன்
வேலடியில்
அண்ணாந்து சிலிர்த்து
மகிழும்
பக்தர் கூட்டம்...
சொர்கவாசல் உச்சிவீட்டின்
படிகள் என்று
ஏறுமோ
எந்தன் கால்கள்..
உந்தன் கோவில்...!

பொன் சிற்பம் நீ....
இங்கிருந்து காணும்
போழ்தே அங்கிருக்கும்
நினைவுகள்...!
குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன்
நீ இருக்க..
பத்துமலை பக்கம் .
உனைப் பத்திரமாய்
நிறுத்தி வைத்தார்...

எங்கிருந்தால் என்ன ...
நீ முருகா..!
நின் கருணைக்
கிரணங்கள்
புவிதனை சூழும்போது...!
உனக்கும் எனக்குமான

இடைவெளி.
மயில் கணக்கில்
நீளும்போது..
பூசலையாராய் நானும்...
தில்லையிலே
பூஜிக்கின்றேன் .....
அறிந்து கொண்டு..
அழைத்து செல்வாய்...
என்றாவது பத்துமலை..!
===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக