உலகம்
என்பது
என்னுள்
சுழல்வது....
-------------------------------
என்னை ...
அறியவா...
எனக்கு இந்தப்
பிறவி..!
------------------------------
இந்த உடல் ..
வாடகை வீடு...
காலியாகி விடும்.......!
உயிரே...புரிந்துகொள்..
இப்படிக்கு....
ஆன்மா..!
----------------------------------
விதை தரும்....
விருக்ஷமும்...
மண்ணுக்குள்
அன்று....
விதையாகத்
தான்..!
--------------------------------------------
கைப்பிடி ....
மூளைக்குள்
அனந்தகோடி
அறைகள்...!
--------------------------------
அளவில்லாததை....
"இதயம்"
என அளந்து...
வைத்தான்.!
-----------------------------------
பூஜ்ஜியமும்
இல்லை
ராஜ்ஜியமும்
இல்லை...
எதற்கு எல்லை..?
--------------------------------------
ஒன்றும்
இல்லாத
பரவெளிக்கு......?
பந்தல் எதற்கு...!
பகட்டு எதற்கு..?
------------------------------------------
எங்கும்.....
நான்.....!
எங்கும்...
நீ..!
யாரங்கே...?
கடவுளா..!!!
-------------------------------------------
மௌனத்திற்கு
மொழி
எதற்கு..
மொழியே
மௌனமான போது...!
--------------------------------------------------
காற்றில்....
கதவு தான் சாற்றியது....!
ஜன்னல்.... தானே,...
திறந்து கொண்டது..!
---------------------------------------------------------
வாசல் முன்னே....
யார்...வரவுக்கெனக்...
காத்திருந்தது..
கோலம்,,!
-----------------------------------------------------
பட்டம்...வாலோடு..
பறந்தது....!
நூலையும்...
இழுத்துக்கொண்டு ..!
----------------------------------------------------
ஆர்ப்பரிக்கும்...
கொந்தளிக்கும்...
நீலக் கடல்....
அடித்தளத்தில்...
மகாமௌனம்.....!
மனித மனங்கள்..!
-----------------------------------------------------
காலையில்...அவளது
பின்னலோடு சேர்ந்து
சிரித்தது..ரோஜா...!
மாலையில்...?
கதிரோடும்...காற்றோடும்..
சதிராடி..சருகானது..!
----------------------------------------------------
சந்தையில் விற்காத
பானைகள்...!
எழுத்தைத்
தாங்கத் துடிக்கும்..
காகிதங்கள்...!
முகவரி தேடும்..
முதிர் கன்னிகள்..!
-----------------------------------------------------------
எண்ணமும்....
பேனாவும்..
இசைய...
கவிதை ...
பிரசவம்..!
--------------------------------------------------------
மீனுக்குப் பொரி...!
வாலைமீன்களே ..!
வலைகள்...விழும்..
ஜாக்கிரதை....!
----------------------------------------------------
கண்பார்வை.....
இருந்தால் தான்
கண்ணாடியும் ...
பேசும்..!
---------------------------------------------------------
மேடு....பள்ளங்கள்
இருந்தாலும்..
வாழ்க்கைப்
பயணம்
தொடரும்..!
---------------------------------------------
நானே..பல....
உருவங்களில்.....
இதில் எது...நான்...
எதில்....நான்...?
காலத்தின் கோலமாகப்..
புகைப்படங்கள்...!
----------------------------------------------------
நிலம்
காத்திருந்தது...
மேகமும்
காத்திருந்தது..!
மரமும்
காத்திருந்தது...!
மழைக்காக...!
-------------------------------------------------------
பெட்டியைத் திறந்தபோது..
கண் சிமிட்டி அழைத்தன
வண்ணக் கற்கள்....
அள்ளிக்கொள்...அப்படியே..
பெருங்கூச்சல்.....!
பெரும்பொருள் உலகமிது...!
ஆசை காட்டி அழைத்தது...
தொடாமல்....மனதை..
அழுத்தி சாத்தினேன்....!
அமைதி மனதை.. நிறைந்தது...!
------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக