ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

தீக்குச்சிகள்..




சுமக்கும்
பயிற்சி
புத்தகப்பை...!
=====================

தாங்கும் பூமிக்கு...
மரத்தின் பரிசு
விதைகள்..!
=====================
பூவிதை...
தூவினேன்..
புதுமலருக்கு..!
=========================
எழுந்துவிட்ட பிறகும்..
இறங்க மறுக்கிறது..!
சோம்பல்.!
==========================
ஒருவர் நடக்கும் 
பாதையா..?
உன் மனது?
==========================
உன் முகத்தின் 
மூன்றாவது கண்..1
மூக்குத்தி..!
==========================
சொல்லிக் கொள்ளாமல் 
போகிறது...
நேரம்..!
===========================
நேற்று மானத்தைக் காத்தது
இன்று காற்றில் பறக்குது....
உலரும் உடைகள்..!
==============================
மனதின் 
குழந்தை
சிரிப்பு..!
================================
நெஞ்சுக்குள்ளே 
சுரங்கம்...!
அந்தரங்கம்..!
===============================
எவருக்கோ..?
சுற்றுகிறது..
செக்குமாடு..!
================================
உழவனிடம்
இல்லை
நிலம்..!
===================================
புள்ளுக்கும்
தாய்வீடு..!
வேடந்தாங்கல்..!
====================================
சுட்டால் 
தான்
செங்கல்...!
====================================
சுண்டலோடு...கோலாட்டம்..!
கொண்டாட்டம்...
கொலுபொமமைகள் ..!
=======================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக