திங்கள், 7 மே, 2012

மனம் அடங்கும்..!


என் கண்ணாடி இதயத்தை
கல்லால் அடித்தால்...உடையுமா
என்று ஆராய்ச்சியா?

எறிந்து  பார்த்து தோற்றாயே,,!.
இடியாய் அடி விழுந்தும்....
உடையவில்லை..!

பாறையாய் மாறியது இதயம்..
கண்ணீரும் உறைந்தது  
பனிக்கட்டியாய் ..!

என்றாவது வெளிப்படும்...
எரிமலையாய் இதயமும்...!
கடலலையாய்....கண்ணீரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக