திங்கள், 7 மே, 2012

எதிரும்....... புதிரும்...!


காட்டாறு பொங்கும் 
நீர்பரப்பின் நடுவே
பாறை போல் தடுக்க....
எதிரி வேண்டும்...!

வேகமாய் போகும் 
பாதையிலே....தனியாகாமல்...
கூடவே போட்டிக்கு 
எதிரி வேண்டும்....!

 
கரையோர மணல்வீட்டை..
தகர்க்கவென்றே 
துள்ளிவரும் அலையாய்..
எதிரி வேண்டும்....!

செயலுக்கு செயல் 
ஏன் என்று கேட்டு 
அடக்கி ஆளவும்
எதிரி வேண்டும்...!

சமாதானப் பார்வை 
முன்பு....போர்க்கொடி 
ஏந்தி...வீரனாக்க....
எதிரி வேண்டும்...!

வேகத்தோடு....
ஓட்டும்போது....
வேகத்தடையாய்..
எதிரி வேண்டும்...!
எதிரிலே .... புதிராக
மேலும்  உயர்த்த 
காலடியில்  கம்பளமாய்..
எதிரி வேண்டும்....!

உறுதியாய் ....எதிரிதான்..
ஏணியாய்...உதவுவான் 
உயரம் ஏற்றுவான் ..
ஐயம் வேண்டாம்....!

தனிக்காட்டு ராஜாவாய்
வாழும்போதோ...
சூழலே......சூழ்ந்து
நெஞ்சைக்  கொல்லும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக