சனி, 12 மே, 2012

மனதுக்கு இனி அவள்....!


வெள்ளம் அடித்துச் செல்ல
ஆற்றில்
தள்ளி விடப்பட்டு
எரியும்
குத்து விளக்கு  !
தனித்து விடப் பட்ட
மணிப் புறா !
சுதந்திரப் புறா அல்ல !
வதங்கிய கூண்டில் 
சிக்கிக் கொண்ட  
சிறகொடிந்து போன 
சித்திரச் சிலை !
முத்திரை இழந்து 
சித்திர வதைக் குள்ளான  
பக்திக் குயில் !
 
தன்னிணையைத் தேடி அலைந்து 
நாடு விட்டு நாடு சென்று
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
முடிவில்
என் தோளில் வந்தமர்ந்த 
பொன்குயில் !
"என்னவன்" என்றென்னை 
உரிமையாய் 
ஒட்டிக் கொண்டு 
இதயத்தில் 
கூடு கட்டிக் குடியிருக்கும் 
ஜோடிப் புறா ! 
இணையைத்  
தன்னவன் ஆக்கி என்னைச்
சிறையிட்ட
சிற்பச் சிலை !
மனத்துக்கு இனிய வளாய் 
உளத்தில் நிறைபவள் 
ஒளிந்திருந்து விழித்திருந்து
எனக்கு
ஒளி யூட்டும்  
பாவை விளக்கு !
கோயில் விளக்கு !
குத்து விளக்கு !
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக