ஞாயிறு, 13 மே, 2012

நீலவைரம்...!

 
 
தங்க ரதம் இவன்...
நான்மாடக் கூடலில்
தடாகையை மனதில் ஏந்தி
ஆயிரம் பாயிரம் ஏற்றி...
பௌர்ணமி தினம்
கண்ட ஈசன்..!

கருணையை விழிகளில்
தீபமாய் ஒளிரவிட்டுக்
காத்திருக்கும் கண்ணன்...
தங்க ரதமாய் சுமந்தாலும்
அன்னையோடு..ஆடும்
பொன்னம்பலத்தவன்...!

குடத்து விளக்கை காண..
கோபுரத்தில் எரிபவன்.. நீ..
உன் சுடரோ உலகெங்கும் 
ஒளிர...இரவும்... பகலாகும்..
பன்னாட்டு நீலவைரம்...!
சிதம்பரப் பெட்டிக்குள் 
பாதுகாப்பாய்...!

கனவாகிப் போன 
நிஜங்கள் மீண்டும்
கனவிலேயே உருப்பெற்று 
இசையாய்..கவியாய்...
அமுத கீதமாய்
நெஞ்சில் அலைகளாக...
என்ன தவம் செய்தேனோ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக