ஞாயிறு, 10 ஜூன், 2012

விழுதுகள்.....வித்துக்கள்....


குயில் கூட கூவ மறுத்து
ஊமையானதே...
காகம் கூட கரைய இங்கு
நேரம் பார்த்ததே..
இலைகள் அசையாமல்
அடம்பிடித்ததே..
இயற்கை அன்னை கண்ணை
மூடி தவமிருந்ததேன்..?

பரந்த இடம்...பரந்த மனம்... 
இங்கு மட்டும் தான்..! எங்கும் 
அலைபாய்ந்த கண்களோடும் 
வினாத்தொடுக்கும் இதயத்தோடும்
நுழைவாயில் சேரும் முன்னே..

கைவிரல்கள் கணக்கெடுத்தது...!
காலணி  வரிசைகளை..!
நூற்றுக்கும் மேற்பட்ட இதயங்கள்
இயங்கும் கோயிலடா.... அங்கே...!
அமைதியும் நிசப்தமும்
இறைவனாகக்   குடிகொள்ள..!

கண்களாலும்.... கைவிரல்களாலும்...
ஊமை பாஷை  பேசிய குழந்தைகள்..!
நீங்கள் இருப்பது விடுதியல்ல....
மாதுளை ஓட்டுக்குள் மாணிக்கமாய்
மின்னும் மாதுளை வித்துக்கள்..

நாளைய ஆலம்விழுதுகள்..
பேசாத நாவோடும்...
கேளாத செவியோடும்...
அன்போடும் ஒன்றாகச்
சேர்ந்து நின்ற போது...
உங்களின் பலம் பார்த்தேன்..!

செலவழித்த நேரத் துளிகள்....
எனக்குள் உறைய..!
திரும்பியவளுக்கு
ஆச்சரியம்..!!
தன் மனசு தனக்கே
போட்டதே  தாழ்....?
பேரமைதியும் ......ஈரவிழிகளும் 
அதற்கு நன்றி சொன்னது..!
=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக